19ம் திகதி வரை பயணத்தடை நீடிப்பு!

மாகாணங்களுக்கு இடையே அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையானது எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொவிட் பரவல் நிலைமை அதிகரித்து வந்தமையினால் முதலில்  மாகாணங்களுக்கு இடையேயான பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்நிலையின், தற்போது தளர்த்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளும், மற்றும் அமுலில் உள்ள மாகாண பயணக்கட்டுப்பாடுகளும் நாளை முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும்.

எனவே, 19ஆம் திகதியின் பின்னரே மீளவும் பயணக்கட்டுப்பாடு விதிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version