இலங்கை

15வயது சிறுமி துஷ்பிரயோகம்! இதுவரை 26பேர் கைது!

15வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட 26பேர் தற்போதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பிலே குறித்த 26பேரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது நடைபெறும் விசாரணைகளுக்கு அமைவாக இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் 16 பேரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது கைது செய்யப்பட்ட26 பேர்களுள் 20 பேர் குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் எனவும், ஏனைய 6 பேர் அச்சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளத்தில் விற்பனை செய்து வாகனத்தில் அழைத்து சென்றவர்கள் எனவும் விசாரணைகள் ஊடக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன் இதில் கைது செய்யப்பட்டவர்களுள் குறித்த சிறுமியின் தாயும், அச்சிறுமியை இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தியவரும் உள்ளடங்குகின்றனர்.

இதுகுறித்து நடாத்தப்பட்ட விசாரணைகளில் இரத்தினக்கல் வியாபாரி ஒருவரும், கப்பல் ஒன்றின் கெப்டன் ஒருவரும், அவரது உதவியாளரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 15வயது சிறுமியின் தொலைபேசியை சோதனையிட்ட போது மேலும் பலர் குறித்து தகவல்கள் கிடைத்து வருவதாக அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button