இலங்கையாழ்ப்பாணம்

யாழ் நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்! பலருக்கு நேர்ந்த கதி!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் விதிகளை மீறி யாழ்ப்பாணத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் பிறந்தநாள் கொண்டாடிய 19பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் பிறந்தநாள் கொண்டாடிய 19 பேர் அதே விடுதியில் சுய தனிமைபடுத்தபட்டனர்.

இந்தச் சம்பவம் நேற்று (02) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற 19 பேர் நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முற்பட்டுள்ளனர்.

அதனை அறிந்த அப்பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர், ஊர்காவற்றுறை பொலிஸாருடன் சென்று தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதாக 19 பேரையும் அந்த விடுதியிலேயே சுயதனிமைப்படுத்தினார்.

குறித்த நட்சத்திர விடுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 19 பேருக்கும் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button