ஹபரனை சம்பவத்தை விசாரணை செய்ய விசேடகுழு நியமனம்!

ஹபரனை பகுதியில் ஏற்பட்ட இராணுவத்தினருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலைமை குறித்து அடுத்தகட்ட நடவடிகைகளை முன்னெடுப்பதற்கு சிரேஸ்ட மேஜர் ஜெனரல்கள் இருவர் அடங்கிய விசாரணை குழுவொன்று இராணுவத்தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இராணுவ சேவையில் இருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைமை வலுவடைந்ததது.

இதனால் அது குறித்த உண்மையான விடயங்களை அறிவதற்கான விசாரணைகளை நடத்துவதமாறும், பொலிஸ் நிலையத்தினால் இது குறித்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் முறைபாடு ஒன்று செய்யப்பட்டது.

ஆகவே இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிகைகளுக்காக குறித்து விசாரணை செய்வதற்காக குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி விசாரணைகளுக்கு அவசியமான தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் விசாரணை குழுவினால் திரட்டப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான அறிக்கை விரைவில் இராணுவ தளபதியிடம் கையளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version