வவுனியா CTB பஸ் சாரதி ஒருவருக்கு தொற்றுரூறுதி செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற போது குறித்த சாரதிக்கு நடாத்தப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு தொற்று உள்ளமை தெரியவந்தது.
இதனை அடுத்து பஸ் ட்ரைவருடன் தொடர்பை பேணிய இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மூவர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
நீண்டகால பயணத்தடையின் பின்னர் போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்குள் மட்டும் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வட மாகாண பஸ் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.