இலங்கை விமானங்கள் இத்தாலியில் தரையிறங்கத்தடை!

நாளை முதல் மறு அறிவித்தல் வரை இலங்கை விமானங்கள் இத்தாலியில் தரையிறங்குவதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

மற்றும் இந்தியா, நேபாளம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், பங்களாதேஸ் ஆகிய நாடுகளிலில் இருந்து பயணிக்கும் விமானங்களுக்கும் இத்தாலியில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இத்தாலியின் சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்ற குறித்த நாடுகளில் இத்தடை விதிக்கப்பட்டமைக்கு  காரணமென அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இலங்கை உட்பட 6 நாடுகளில் இருந்து பயணிக்கும் விமானங்களுக்கு துருக்கி அரசும் தற்காலிக தடை விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version