இலங்கை

அம்பாந்தோட்டை, சீனாவின் கீழ் கொண்டு வரப்படுகிறதா?

சீன காலணித்துவத்தின் கீழே அம்பாந்தோட்டையை கொண்டு வரும் முயற்சியாகவா திஸ்ஸமஹராம வாவி புனரமைப்பு பணிகள் சீனாவிடம் கொடுக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் எழுந்துள்ளதாக தேசிய பிக்கு முண்ணனி தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் பேச்சளவில் மாத்திரமே செயற்படுத்தபடுகின்றன.  இவ்வாறு தேசிய பிக்கு முன்னணியின் பொதுச்செயலாளர் வகமுல்லே உதித தேரர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் ஒற்றையாட்சி முறைமையை  உறுதிப்படுத்துவதாக தெரிவித்து  கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்தார்.

ஒரு நாடு – ஒரு சட்டம் எனும்ற கொள்கை பேச்சளவில் மாத்திரமே கூறப்படுகிறது. சீன நாட்டவர்கள் நாட்டினது பொது சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களாக செயற்படுவதை காண முடிகிறது.

தொல்பொருள் சிறப்பு மிக்க திஸ்ஸமஹராம வாவியை புனரமைக்கும் பணிகளை சீன நாட்டவர்கள் முன்னெடுத்துள்ளார்கள். இந்த வாவியை புனரமைக்கும் திறமை தேசிய மட்டத்தில் உள்ள பொறியியலாளர்களுக்கு இல்லையா? நாட்டின் மரபுரிமைகளை பிற நாட்டவர்கள் வசம் ஒப்படைப்பது  பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்.

திஸ்ஸமஹராம வாவி புனரமைப்பில் ஈடுப்பட்ட  சீன நாட்டவர்கள் அணிந்திருந்த ஆடை சீன நாட்டு இராணுவ சீறுடையை ஒத்தது என குறிப்பிடப்பட்டது. இவ்விடயம் குறித்த அரசாங்கமும், சீன தூதரகமும் குறிப்பிடும் கருத்துக்கள் முன்னுக்கு பின் முரணானதாக காணப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீன நாட்டவர்கள் அபிவிருத்தி பணிகளிலும்,  பாரம்பரிய கைத்தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறார்கள். இதனை சாதாரண விடயமாக கருதமுடியாது.

வரலாற்றில் இடம் பெற்ற சம்பவங்களை மீட்டிப்பார்த்துக் கொள்வது அவசிமாகும் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button