யாழில் அதிகரிக்கும் தொற்று! ஒரே நாளில் 67 பேருக்கு உறுதி!

Jaffna (TamilSK) யாழ்ப்பாணத்தில் 67பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள்ளது.

யாழில் தொற்று உறுதிபடுத்தப்பட்ட 67பேர் உள்ளடங்களாக வடக்கு மாகாணத்தில் மொத்தம் 73பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 741 பேருக்கு மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போதே 73 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் மூவருக்கும், மன்னார் மாவட்டத்தில் இருவருக்கும், யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்குமாக மொத்தம் 73 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version