அரசுக்கு எதிராக தீப்பந்த போராட்டம்!

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் விலை ஏற்றம் உள்ளடங்களாக ஏனைய பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஜே.வி.பி இனரால் தீப்பந்த போராட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டமானது இன்று திங்கட்கிழமை இரவு  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கல்முனை பகுதியில் ஆரம்பமான இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து 50ற்கும் அதிகமான கட்சி ஜேவிபி ஆதரவாளர்களும்  பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது கோஷம் எழுப்பிய போராட்டகாரர்கள் தற்போதைய  அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் எனும் கோஷத்தை  எழுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version