இலங்கையாழ்ப்பாணம்

விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதி தீடீர் மரணம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டு 14ஆண்டுகளின் பின்னர் குற்றவாளியல்ல என நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.

அன்றைய பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்சவை கொலை செய்ய முயன்றதாக குற்றசாட்டில் கடந்ந்த 2006ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண புங்குடுதீவில் பிறந்த இவர் 41 வயதான சந்திரபோஸ் செல்வச்சந்திரன் என்பவர் மயக்கமுற்று விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் 2006ம் ஆண்டு பயங்கரவாதத் தடைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டார்.

2006 ம் ஆண்டு மார்கழி 1ம் திகதி கொழும்பு ,கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில் வைத்து அன்றைய பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி புலிகள் இயக்கத்தின்  தற்கொலை குண்டுதாரியால் நடாத்தப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன், பாதுகாப்பு செயலாளரான கோட்டபாய ராஜபக்ஸ, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன், அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்து சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 14 வருடங்கள் வழக்கு நடைபெற்றது.

அதன் பின் அவர் நிரபராதியென கடந்த 2019ம் ஆண்டு மார்கழி மாதம் 18ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பட்தும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button