பேஸ்புக்கில் கேவலப்படுத்திய நண்பர்களை சிலுவையில் வைத்து ஆணி அடித்த நபர்!

பேஸ்புக் ஊடாக நண்பர் ஒருவரை கேவலத்திற்கு உட்படுத்திய இருவரை கடத்திச் சென்று கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் குறித்து கண்டி, பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இருவரையும் தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். பின்னர்  அம்பிட்டிய பகுதிக்கு குறித்த இருவரையும் அழைத்து சென்று சிலுவை போன்ற பலகைகளில் வைத்து ஆணியால் அடித்து சித்திரவதை செய்ததாக தெரிய வந்துள்ளது.

கடந்த 25 ஆம் திகதி இச்சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், அம்பிட்டிய பகுதியில் ஆலயம் ஒன்றினை நடத்தி செல்லும் 30 வயதுடைய துஷ்மந்த என்பவர் என தெரிவிக்கபடுகிறது.

அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட மூவரும் நண்பர்கள் என்பதும்  பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த 44 மற்றும் 38 வயதான இருவரும் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் தலைமறைவாகி உள்ள நிலையில் சந்தேக நபரை தேடி பலகொல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version