எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

அண்மையில் அதிகரித்த எரிபொருள் விலையேற்றத்தினை கண்டித்து சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாத்தறை, கடுகண்ணாவை ஆகிய பகுதிகளில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

மாத்தறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்டத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன மற்றும் வெலிகம நகரசபையின் முன்னாள் தலைவர் ஆகியோர் உள்ளடங்களாக பலர் பங்கேற்றனர்.

இதன்போது மாகதுர பிரதேசத்திலிருந்து மாத்தறை நகர் வரை வாகனப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, கடுகண்ணாவைப் பிரதேசத்திலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எரிபொருள் விலை அதிகரிப்பட்டதைத் தொடர்ந்து கடந் தவாரம் முதல் பல பகுதிகளிலும், எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Exit mobile version