ஆயுதங்கள் வைத்திருந்த ஐவர் கைது!

உள்ளூர் தயாரிப்பு ஆயுதங்களை வைத்திருந்த ஐந்து பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி, அங்குலான மற்றும் கல்கமுவ ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை தம்வசம் வைத்திருந்ததாக தெரிவித்து ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதில், அங்குலான பிரதேசத்தில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கைக்குண்டுகளுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version