வெளிநாட்டில் இருந்து வந்த 24பேருக்கு கொரோனா!

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பிய 24 பேருக்கு நேற்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டது.

நேற்றையதினம் 1,825 நபர்களுக்கு  தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 1,801 பேர் சித்திரை புத்தாண்டு கொத்தணி உடன் தொடர்பு பட்டவர்கள் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாடு முழுதும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 2 இலட்சத்து 51 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களது எண்ணிக்கை 32 ஆயிரத்து 49 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 840 ஆகவும் தொற்றால் மரணித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 905 ஆகவும் அதிகரித்துள்ளது.

Exit mobile version