இலங்கையாழ்ப்பாணம்

மிகப்பெரும் உரத் தொழிற்சாலை யாழ்ப்பாணத்தில் உதயமாகிறது!

சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை ஒன்று யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

குறித்த தொழிற்சாலையானது யாழ்ப்பாணத்தின் வடமராட்சி முள்ளி பகுதியில் சுமார் 23 கோடி பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டினது ஜெய்க்கா நிறுவன உதவியில் உருவாக்கப்பட்ட குறித்ஹ தொழிற்சாலையினால் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் கிலோ உரத்தினை உருவாக்க முடியுமென கூறப்படுகிறது..

கரவெட்டி பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் இந்த தொழிற்சாலை மூலம் பிரதேச சபைகளின் குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் 9 மாகாணத்துக்கும் ஒவ்வொரு திட்டம் வழங்கப்பட்ட நிலையில் வட மாகாணத்துக்கான திட்டம் கரவெட்டி பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி மதியம் 2 மணிக்கு விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button