இலங்கையில் ஹெலிகப்டர் வாங்கிய அரிசி வர்த்தகர்!

இலங்கை பொலநறுவையில் உள்ள ரத்னா அரிசி ஆலையின் உரிமையாளரான மித்ரபால லங்கேஷ்வர என்பவர் அண்மையில் ஹெலிகப்டர் ஒன்றை கொள்வனது செய்துள்ளார்.

இது குறித்து ஹெலிகப்டரை கொள்வனவு செய்த மித்ரபால தெரிவிக்கையில்

அண்மையிலே ஹெலிகப்டடை கொள்வனவு செய்த பொலநறுவை அரிசி வர்த்தகர் நான் தான்.

விரைவிலே உள்ளூர் விமான சேவை ஒன்றினையும் ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளேன்.

அத்துடன் தனிப்பட்ட விமானம் ஒன்றினையும் ஹெலிகப்டர்கள் சிலவற்றையும கொள்வனவு செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.

முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் பணத்திலே இந்த ஹெலிகப்டர் கொள்வனவு செய்யப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன்.

வெளிநாடுகளிலே இருந்து கொண்டுவரப்படுகின்ற அரிசியிலே  இரசாயனங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் எதிர்வருகின்ற தேர்தலில் நான் போட்டியிடவுள்ளேன் என்றார்.

Exit mobile version