இலங்கையாழ்ப்பாணம்

யாழில் கடலட்டை பிடித்த 12பேர் கைது!

சட்ட விரோதமான முறையில் கடலட்டை பிடித்த 12பேர் யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது பன்னிரண்டு மீனவர்களது 4 படகுகளும், அவற்றிற்கான வெளியிணைப்பு இயந்திரங்களும், அவர்களால் பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தினை இல்லாத காரணத்தினாலேயே இவர்களை கடற்படையினர் கைது செய்ததாக  கடற்தொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button