தூக்கில் தொங்கிய மகன்! மாரடைப்பில் தாய் மரணம்! மட்டக்களப்பில் சோகம்!

மகன் தூக்கில் தொங்கியதை பார்த்த தாயார் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது மட்டக்களப்பு ஏறாவூர், ஜயங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் புதூர் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஞானப்பிரகாசம் மைக்கல் என்பரும் அவருடைய தாயான 70 வயதுடைய ஞானபிரகாசம் பாக்கியம் என்பவர்களே உயிரிழந்துள்ளனர்.

தூக்கில் தொங்கியவர் திருமணம் முடித்து வாழ்ந்து வந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து  ஏறாவூர் ஜயங்கேணியில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் மகனை காணவில்லை என தாயார் தேடிய போது வீட்டின் அறை கதவு பூட்டப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார்.

உறவினர்களின் உதவியுடன் அறைகதவை உடைத்து பார்த்த போது தூக்கில் தொங்கிய நிலையில் மகன் உயிரிழந்திருந்ததை பார்த்துள்ளார்.

இதனை அடுத்து அவரது தாயாருக்கு சில மணித்தியாலங்களில் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version