தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்!

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்து  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தற்பொழுது பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள இக் காலப்பகுதியில் தபால் சேவை தொடர்பான பணிகள் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் உள்நாட்டு வெளிநாட்டு தபால்கள், பொதிகள் ஆகியவற்றை ஏற்று கொள்ளல், விநியோகம் செய்தல், மருந்து பொருள் விநியோகம், பணபரிமாற்றம் ஆகிய தபால் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version