இலங்கை

21ம் திகதி தளர்த்தப்படுகிறது பயணத்தடை!

தற்போது அமுல் படுத்தப்பட்டுள்ள பயணத்தடை குறித்த அறிவுப்பொன்று சற்று முன் புதிய வெளியா உள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நாடளாவிய ரீதியில் அமுல் படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மீளவும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை பயணத்தடை அமுல் படுத்தப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பயணத்தடை தளர்த்தப்படுகின்ற போதும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடானது தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

அத்துடன், மக்கள் ஒன்று கூடல்கள், பொது நிகழ்வுகள் போன்றவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button