ரயில் தண்டவாள திருடர்கள் ஐவர் கைது! யாழில் சம்பவம்!

யாழ், நாவற்குழி பகுதியில் உள்ள புகையிரத பாதையில் உள்ள தண்டவாளத்தில் இருந்த பொருத்தும் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கிய குற்றச்சாட்டில் ஐவர்(5) கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாண  பொலிஸார் தெரிவித்தனர்.

பயணத்தடை காரணமாக புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 14ம் திகதி தண்டவாள பாதையில் இருந்த பொருத்தும்  கிளிப்புகள் களவாளப்பட்டு இருந்தது.

சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்த யாழ் பொலிஸார், களவாடப்பட்ட தண்டவாள கிளிப்புகளை கொள்வனவு செய்து வைத்திருந்த ஐந்து சந்தியை சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர்.

அவரிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளில் அரியாலையை சேர்ந்த 24 வயதுக்கு உட்பட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

கிளிப்புகள் கழற்றப்பட்ட நிலையில் புகையிரதம் பயணித்தால் தடம்புரளும் ஆபத்து காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version