இலங்கை

அத்தியவாசிய சேவைகள் குறித்து புதிய வர்த்தமானி!

பயண கட்டுபாடு அமுலில் உள்ள காலபகுதியில் மக்களது பொது வாழ்வை  தொடருவதற்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது குறித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவிப்பில் அடிப்படை பொருட்கள் மற்றும் 10 சேவைகள் உள்ளடக்கம் செய்யப்பட்டுள்ளன.

அதில் துறைமுகங்கள், பெற்றோலிய தயாரிப்புக்கள், சுங்கம், ரயில்வே திணைக்களம், போக்குவரத்து ஆகிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தவிர, அனைத்து மாவட்ட செயலகங்கள் உள்ளிட்ட நிருவாக பிரிவுகள், மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து காப்புறுதி சேவைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கூட்டுறவு சதோச போன்ற மக்களுக்கு உணவு பொருட்கள் மற்றும் பிற நுகர்வோர் பொருட்களை வழங்கும் நிறுவனங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button