வவுனியாவில் 13பேருக்கு தொற்று உறுதி!

வவுனியா மாவட்டத்தில் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் இனம்காணப்பட்ட தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கபட்டவர்கள் மற்றும் எழுமாறாக நடாத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

வவுனியா, சகாயாமாதாபுரத்தை சேர்ந்த ஏழு பேருக்கும், எல்லப்பர் மருதங்குளம் பகுதியில் ஒருவருக்கும், ஆச்சிபுரம் பகுதியில் ஒருவருக்கும், உக்குளாங்குளம் பகுதியில் ஒருவருக்கும், நெளுக்குளம் பகுதியில் ஒருவருக்கும், அரசடிக்குளம் பகுதியில் ஒருவருக்கும், சூடுவெந்தபுலவு பகுதியில் ஒருவருக்கும் என மொத்தமாக 13 பேருக்கு தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

தற்போது தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புகளை பேணியவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exit mobile version