களியாட்ட நிகழ்வு நடத்திய 9 பேர் கைது!

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள சொகுசுமாடி கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகே களியாட்ட நிகழ்வை நடத்திய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில்  மூன்று பெண்களும், மூன்று வெளிநாட்டவர்களும் உள்அடங்குவதாக பொலிஸ் ஊடகபேச்சாளர், அஜித் ரோஹன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த ஒன்பது பேரும் இன்றையதினம்  கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடவுள்ளனர்.

Exit mobile version