இன்றும் நாளையும் ஓய்வூதிய கொடுப்பனவு! இலவச பஸ் சேவை ஏற்பாடு!

இன்றைய தினமும் நாளைய தினமும் சிரேஷ்ட பிரஜைகளிற்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெற்று கொள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கபட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓய்வூதியம் பெறுவோரது வங்கி கணக்குகளிற்கு கொடுப்பனவு பணமானது வைப்பிலிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், வங்கிகளுக்கும், தபால் நிலையங்களிற்கும் செல்ல  இராணுவத்தால் இலவச பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்தார்.

ஓய்வூதியத்தினை பெறுவதற்கும் பஸ்களில் பிரயாணம் செய்வதற்கும் ஓய்வூதியத்திற்கான அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க முடியும்/

நாட்டில் 6 இலட்சத்தி 67 ஆயிரத்தி 710 ஓய்வூதியம் பெறும் சிரேஷ்ட பிரஜைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version