யாழ் மட்டுவிலில் விபத்து! ஒருவர் பலி!

இன்று (வியாழக்கிழமை) மாலை யாழ்ப்பாணத்தின் மட்டுவிலில் இடம் பெற்ற வாகன விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது மட்டுவில் – பன்றித் தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகே இடம் பெற்றுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தல் மையத்திற்கு ஏற்றிச் சென்ற பேருந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதை அடுத்து பன்றித் தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் பதற்றமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

Exit mobile version