தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகிறார் ஞானசார தேரர்!

பொ து ப ல சே னா அமைப்பினது செயலாளர் ஞானசார தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவிபிரமாணம் செய்யவுள்ளதாக அபேஜாதிகபலய கட்சியினது தலைவர் சமன்பெரேரா தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அபே ஜாதிக பலய கட்சிக்கு தேசிய பட்டியலின் ஊடாக ஒரு ஆசனம் கிடைத்திருந்தது.

இத்தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக பல சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் அதுரலிய ரதன தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி பிரமானம் செய்திருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினராக 3மாதத்திற்கு மாத்திரமே பதவி வகிப்பதற்கு விரும்புவதாக அதுரலிய ரதன தேரர் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியதாக சமன் பெரேரா தெரிவித்தார்.

இந்நிலையில் அதுரலிய ரதன தேரரின் பதவி ஆறுமாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து அவர் ராஜினாமா செய்த உடன் ஞானசார தேரர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்பாரென அக்கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

Exit mobile version