யாழ்ப்பாணத்தில் 5 குழந்தைகளுக்கு தொற்று உறுதி!

யாழில் ஐந்து குழந்தைகளிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிறந்து 12 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கும் தாய்க்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில், அதி தீவிர சிகிச்சைபிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிறந்து 29 நாட்களே ஆன குழந்தை ஒன்றுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இளவாலை பகுதியில் 9 மாதகுழந்தை ஒன்றுக்கும் மானிப்பாய் பகுதியில் 10 மாத குழந்தை ஒன்றுக்கும் பெற்றோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version