இலங்கையாழ்ப்பாணம்

வீடுடைத்து கொள்ளை! யாழில் இருவர் கைது!

பட்டபகலில் வீடுடைத்து திருடிய குற்றசாட்டில் இரு சந்தேக நபர்களை யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் கச்சேரி – நல்லூர் வீதியிலுள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டு உரிமையாளரினால் யாழ்ப்பாண பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டது.

கடந்த 6ம்திகதி ஞாயிற்று கிழமை வீட்டிலுள்ளவர்கள் மருத்துவமனைக்கு சென்ற வேளை திருடர்கள் வீட்டினை உடைத்து இரு மடிக்கணனிகளையும் பெறுமதியான இரு தொலைபேசிகளையும் இரு சைக்கிள்களும் மேலும் பல பொருட்களை திருடி சென்றனர்.

இது தொடர்பான விசாரணைகளை மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்டதை அடுத்து திருட்டுடன் தொடர்புபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் திருடப்பட்ட அனைத்து பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர்கள் 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button