இலங்கை

இம்மாத இறுதிக்குள் நாடாளுமன்றுக்கு ரணில் செல்வது உறுதியானது!

இம்மாத இறுதிக்குள் ரணில் விக்கிரமசிங்ஹ பாராளுமன்றத்திற்கு செல்வது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் துணைத்தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 8ம் மாதமளவில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சிக்கு தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைத்திருந்தது.

எனினும் தற்போதுவரை எந்த திகதியில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்கு செல்வது என உறுதிபடுத்தப்படவில்லை.

ஆனாலும் இம்மாதத்திற்குல் நிச்சயம் நாடாளுமன்றத்திற்கு செல்வார்.

இப்பொழுது எதிர் கொள்ளுகின்ற நெருக்கடிகளுக்கு விடை காண்பதற்கு ரணில் விக்ரமசிங்ஹ போன்ற முதிர்ச்சியான தலைவர் நாடாளுமன்றத்தினுள் இருக்கவேண்டும்.

ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் பலரும் ரணில் விக்கிரமசிங்ஹ நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டுமென விரும்புகின்றனர் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button