இலங்கை

ஜீன் 29 பாடசாலைகள் மீள ஆரம்பம்? உண்மை நிலவரம் என்ன?

எதிர்வரும் ஜூன் 29 ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் அனைத்து பாடசாலைகளும் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகளில் எவ்விதமான எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மேலும் தெரிவித்ததாவது,

பாடசாலைகளை மீள எப்போது ஆரம்பிப்பது என தற்போதுவரை எவ்விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை.

சுகாதார அமைச்சின் ஊடாக பரிந்துரைகள் கிடைத்த பின்னரே பாடசாலைகளை மீள எப்போது திறப்பது என தீர்மானம் எடுக்கப்படும்.

ஆனால் தற்போது சமூக வலைத்தளங்களின் ஊடாக எதிர்வரும் ஜீன் 29ம் திகதி பாடசாலைகள் மீள திறக்கப்பட உள்ளதாக பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றத என அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button