சதொச விற்பனை நிலையங்கள் தினமும் திறக்கப்படும்!

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச விற்பனை நிலையங்கள் நேற்று முதல் தொடர்ந்து நாளாந்தம் திறக்கப்படவுள்ளன என அமைச்சர் பந்துல குணவர்தன தெரி வித் துள்ளார்.

நேற்று இரவு சதொச விற்பனை நிலை யங்கள் அத்தியாவசிய தேவையாக வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் நடமாடும் வியா பாரிகளுக்கு சதொச ஊடாக குறைந்த விலையில் பொருள்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று மற்றும் இன்று நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பொருளாதார மத்திய நிலையங்களும் மொத்த வியாபாரிகளுக்காக திறந்து வைக்கப் படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version