பைஸர் தடுப்பூசி இலங்கைக்கும் வருகிறது!

கொரோனா தடுப்பிற்காக தற்போது பயன்படுத்தப்படுகின்ற சைனோபார்ம், ஸ்புட்னிக் மற்றும் எஸ்ராசேனேகா தடுப்பூசிகளுக்கு மேலதிகமாக பைஸர் தடுப்பூசியையும் இறக்குமதி செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் ஜீலை மாதத்தில் சுமார் 3 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக மருந்து விநியோக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இதன் முதல் கட்டமாக 3இலட்சம் தடுப்பூசிகள் ஜீலை மாதம் அளவில் கிடைக்கவுள்ளது.

இவ்வருட இறுதிக்குள் 5இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

முதல் தொகுதியாக மூன்று லட்சம் தடுப்பூசி மருந்துகள் அடுத்த மாதம் கிடைக்க உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version