இலங்கையர்கள் கர்ப்பம் ஆவதை தவிர்க்குமாறு கோரிக்கை!

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா சூழ்நிலையில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு இலங்கை குடும்ப சுகாதார பணியகம் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அத்தியாவசியம் அற்ற முறையில் கர்ப்பம் தரிப்பதனை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிகமான தகவல்கள் பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலும், குடும்ப சுகாதார சேவை அதிகாரிகளிடமும் பெற்றுக்கொள்ள முடியுமென விசேட வைத்தியர் சித்தமாலி டிசில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்று ஆரம்பமானது முதல் தற்போதுவரை உரிய சேவைகளை தொடர்ந்து வழங்க சுகாதாரஅமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version