பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்தது தாதியர் சங்கம்!

கொரோனா சிகிச்சை பணிகளை செய்துவருகின்ற தாதியர்களுக்கான தீர்வினை அரசு வழங்க முன்வாரமையினால் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமக்கான பிரச்சனைகள் குறித்து உரிய அதிகாரிகளிற்கு அறிவித்தல் விடுத்த போதிலும் தமக்கான தீர்வினை பெற்றுத்தராமையினால் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுக்கும் தீர்மானத்தை தாம் எடுத்ததாக தாதியர் சங்க தலைவர் s.p மெதிவத்த கூறினார்.

இன்று காலையிலிருந்து நாளை செவ்வாய்கிழமை (01) காலை வரையான 24மணி நேரத்திற்கு சுகயீன விடுமுறையினை பெற்று பணிபகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version