20 வயது இளைஞனுடன் 38 வயது பெண் காதல்! நையப்புடைந்த இளைஞர்கள்!

20வயதுடைய இளைனஞனும் அவனுடன் காதல் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயான 38 வயது பெண்ணும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று செல்வசந்நிதி ஆலய சூழலில் இடம்பெற்றுள்ளது.

தற்போது அமுல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரங்கினையும் கருத்தில் எடுக்காது, செல்வச்சந்நிதி ஆலய பகுதியில் லொள்ளுவிட வந்த போது உறவினர்களால் சுற்றி வளைக்கப்பட்டு களேபரமானது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது

காதல்ராணியின் கணவர் மேசன் தொழில் செய்து வருகிறார், வேலை காரணமாக கொற்றாவத்தை, சமரபாகு பகுதிக்கு சென்று தங்கியுள்ளார். இதன் போது மனைவியுடன் கதைப்பதற்கு தன்னுடன் தொழில் செய்த 20வயது இளையனின் தொலைபேசியை பாவித்துள்ளார்.

இதன்போது 20 வயது இளைஞன் காதல் ராணியின் இலக்கத்தை எடுத்து அறிமுகமாகி, பின் அது காதலாக மாறியது.

அந்தகாதல் முற்றி சிலநாட்களின் முன் இருவரும் ஓடிப் போயுள்ளனர்.

இளைஞனின் உறவினர்கள் இளைஞனுடன் தொலைபேசியில் பேச சந்திக்க முயற்சித்தனர்.

நேற்று (29) செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு காலை 10 மணிக்கு வருமாறு இளையன் கூறியிருக்கிறான்.

இதனை அடுத்து காலையில் சமரபாகு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பலர் சிறு சிறு குழுக்களாக சேர்ந்து செல்வசந்நிதி ஆலய சுற்றுபுறத்தில் மறைந்திருந்தனர்.

இதன்பின் மோட்டார் சைக்கிளில் இளையனும் காதல்ராணியும் வந்துள்ளனர்.

இதன்போது சமரபாகு இளைஞர்கள் அவர்களை சுற்றிவளைக்க, மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு காதல் ராணியையும் நடுத்தெருவில் விட்டு விட்டு இளைஞன் தப்பி ஓட முயற்சித்த போது மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

சந்நிதியடியில் வைத்தே இளைஞன் நையப்புடைக்கப்பட்டார்.

இதனை அடுத்து பார்த்து பொறுக்க முடியாத காதலி, “வாழ்ந்தால் அவனுடன் தான் வாழ்வேன். அவனை அடிக்க வேண்டாம். என்னையும் அவனையும் பிரிக்க முயன்றல் கடலில் வீழ்ந்து சாவேன்“ என மிரட்டியுள்ளார்.

அங்கிருந்தவர்கள் காதல்ராணிக்கு புத்திமதி கூறிய போது கணவனுடன் வாழ என கூறியதை அடுத்து காதல்ராணியில் சகோதரனிற்கு தகவல் கொடுக்கப்பட்டது

சகோதரன் வந்த போது, செல்ல மறுத்த காதல்ராணி குறித்த இளையனுடனே செல்வேன் என அடம் பிடித்துள்ளார்.

இதனை சகிக்க முடியாமல் போன சகோதரன், தனது ஹெல்மேட்டால் தனது சகோதரியை கடுமையாக தாக்கி, மோட்டார் சைக்கிளில் ஏற்றிசென்றார்.

Exit mobile version