தடுப்பூசி வழங்கல் யாழில் ஆரம்பம் ஆகியது!

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் 12 மையங்களில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்திற்கென முதலாவது கட்டமாக ஐம்பதாயிரம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

யாழில் அதிகளவான தொற்றாளர்கள் இனம்காணப்பட்ட பிரதேசங்களிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு குறித்த பிரதேசத்திற்கு வழங்கம் ஏற்பாட்டை சுகாதாரப் அதிகாரிகள் முன்னெடுத்திருந்தனர்.

50ஆயிரம் தடுப்பூசிகளையும் எதிர்வருகின்ற 15 நாட்களுக்குள் வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள விரும்பியோர் மாத்திரம் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் தடுப்பூசி நடவடிக்கைகளிற்காக தெரிவு செய்யப்படாத பிரிவுகளில் இருந்து வேறு நபர்கள் தடுப்பூசி ஏற்றும் இடத்திற்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version