திருமலை பாராளுமன்ற உறுப்பினருக்கு கொவிட் உறுதி!

தனியார் மருத்துவமனை ஒன்றில் PCR பரிசோதனை மேற்கொண்ட போது திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக் கோரலவிற்கு கொவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இப்பொழுது கந்தளாய் பிரதேசத்திலிருந்து அம்பியூலன்ஸ் வண்டி ஊடாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினரது பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பிரமுகர் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக அப்பகுதி PHI தெரிவித்தார்.

Exit mobile version