ஜீன் 7வரை தொடர் ஊரடங்கு! விசேட கூட்டத்தில் முடிவு!

இப்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் பயணத்தடையானது எதிர்வரும் மே 31 மற்றும் ஜீன் 4ம் திகதிகளில் நீக்கப்படமாட்டாது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 7ம் திகதி அதிகாலை 4மணிக்கே நீக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் ஜனாதிபதிக்கும் கொரோனா தடுப்பு மைய உறுப்பினர்களுக்கும் இடையே இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பயணத்தடையானது நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகமானது மாவட்ட அரச அதிபர்களது ஏற்பாட்டின் கீழ் வீடுகளிற்கு வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version