வங்கியில் 91கோடி மோசடி செய்தவர் கைது!

மஹரகம பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் 91 கோடி ரூபாய் மோசடி செய்தமை குறித்து சந்தேக நபரை சி.ஐ.டியினர் கைது செய்துள்ளனர்.

மொனராகலை பிபிலை பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இவர் வத்தே கெதர கூட்டுறவு வங்கியினது பணிப்பாளராக பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொடை நீதவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

Exit mobile version