கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய தயார் ஆகிறது இலங்கை!

அடுத்து வரும் இரு மாதங்களில் கொரோனா தடுப்பூசிகளை இலங்கையில் வைத்து உற்பத்தி செய்வதற்கு தயார் ஆகி வருவதா இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

சீன அரசினது மேற்பார்வையில் தயாரிக்கவுள்ள குறித்த தடுப்பூசிக்கு சினோவார்க் கொரோனா தடுப்பூசி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் வைத்து சினோவார்க் தடுப்பூசிகளை தயாரிப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றிருந்தது. குறித்த கலந்துரையாடல் வெற்றிகரமாக அமைந்திருந்தது.

சினோவார்க் தடுப்பூசியானது சீனா மற்றும் இலங்கை நாடுகளது கூட்டு முயற்சியாக தயாரிக்கப்பட உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version