வீடுகளில் மரணிக்கும் மக்கள்! அதிகரிக்கும் கொரோனா இறப்புக்கள்!

இலங்கையில் தினமும் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.

கடந்த வியாழக்கிழமையில் இருந்து இன்றைதினம் வரை 221 மரணங்கள் பதிவாகி உள்ளது.

இதில் 54 மரணங்கள் வீடுகளில் இடம்பெற்றுள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

நேற்றும், நேற்றைய முந்தினமும் மாத்திரம் 22 மரணங்கள் வீடுகளில் பதிவாகியுள்ளது.

அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் சுகாதார வழிமுறைகளை மக்கள் பின்பற்றினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் என பிரதி சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version