சற்றுமுன் வெளியான செய்தி: ஜீன் 7வரை தொடர் முடக்கம்!

தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுபாடனாது இன்றிலிருந்து எதிர்வரும் இரு வாரங்களுக்கு நாடு முழுவதும் அமுலில் இருக்கும் என இலங்கை இராணுவதளபதி சர்வேந்திரசில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஜுன் 7ம் திகதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியினுள் அத்தியாவசிய பொருட்களை வேண்டுவதற்காக இரு நாட்கள் வழங்கப்பட்டுள்ளது

நாளையதினம்(25) பயணத்தடை நீக்கப்படுவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டு இருந்த போதும் அதில் எவ்வித உண்மையும் இல்லை.

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளியில் செல்ல முடியும்.

நாளை இரவு 11 மணிக்கு அமுலாகின்ற பயணத்தடை எதிர்வரும் 31ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

மீள 31ம் திகதி அமுலாகின்ற பயணத்தடை ஜுன் 4 அதிகாலை தளர்த்தப்படும்.

மீள 4ம் திகதி இரவு 11 மணி தொடக்கம் 7ம் திகதி அதிகாலை 04 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும் என இராணுவதளபதி மேலும் தெரிவித்தார்.

 

Exit mobile version