நல்லூர் Capital ரிவியில் 14 ஊழியருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இருந்து இயங்கும் கப்பிட்டல் ரிவியில் பணிபுரியும் 14ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கப்பிட்டல் ரீவியில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும், ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஊழியர்கள் தனிமை படுத்தப்பட்டு, மூன்று கட்டங்களாக பிரித்து PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று சனிக்கிழமை நாடாத்தப்பட்ட பரிசோதனையில் முடிவில் 9 பேர் தொற்றுடன் இனம் காணப்பட்டனர்.

தற்போதுவரை மொத்தம் 14 ஊழியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடைசியாக இனம் காணப்பட்ட 9 தொற்றாளர்களும் இன்று கொரோனா சிகிச்சை நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version