இரு வாரங்களுக்கு தொடர் முடக்கல்! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை!

இலங்கை முழுவதையும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து முடக்குமாறு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினையும் அவர் எழுதியதாக தென்னிலங்கை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரு வாரங்களுக்கு தொடர்ந்து மூடுவது தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு செயலாளர் தெரிவித்தார்.

எனினும் தற்போது முழுமையாக மூடுவது தொடர்பாக என்னால் எதுவும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

இருவார தொடர் ஊரடங்கை அமுல்படுத்துமாறு அரச மருத்துவ சங்கங்கமும் அரசினை வலியுறுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version