யாழ் வாகன திருட்டு கும்பல் சிக்கியது!

வீதிகளில் விட்டு விட்டு செல்லும் மோட்டர் சைக்கிள்களை நுதனமான முறையில் திருடும் 4பேர் கொண்ட கும்பல் ஒன்றினை யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குருநகர் மற்றும் அச்சுவேலி  பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் 25 -35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து களவெடுத்து செல்லப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பலாலி வீதி மற்றும் வேம்படி வீதியில் இருந்து இவர்களால் திருடப்பட்டவை என பொலிஸார்  தெரிவித்தனர்.

Exit mobile version