மட்டக்களப்பில் விபத்து! 21வயது யுவதி பலி!

மட்டக்களப்பு நாவற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் சுவிஸ் கிராமம், திரைய்மடு பகுதியை சேர்ந்த நாகநாதன் நளாயினி என்பவர்  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை(17) ஆடை தொழிச்சாலைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த போது வீதியை குறுக்கிட்ட இன்னொரு மோட்டார் சைக்கிளை கண்டு தனது மோட்டார் சைக்கிளை சடுதியாக நிறுத்த முற்பட்டபோது பின்னிருந்த யுவதி தவறுதலாக வீதியில் விழுந்து படுகாயம் அடைந்தார்.

படுகாயமடைந்த யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக விசாரணைகளில்  தெரிய வந்துள்ளது.

Exit mobile version