இலங்கை

துப்பாக்கியால் புலிகளின் தலைவர் பேச இதான் காரணம்! முன்னாள் அமைச்சர் ராஜித!

ஜனநாயகவாதிகளை வெளியேற்றம் செய்தமையினால்தான் புலிகளின் தலைவர் துப்பாக்கியால் பேசவேண்டிய நிலை ஏற்பட்டதாக முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியூதினை விடுதலை செய்யுமாறு கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் தெர்விக்கையில்

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்ற ஜனநாயகவாதிகளை இலங்கை நாடாளுமன்றில் இருந்து வெளியேற்றியமையால்தான், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கியால் பேசவேண்டிய நிலை ஏற்பட்டது.

இவ்வாறான ஒரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்காகவே நாம் செயற்படுகின்றோம்.

ஜனநாயக ரீதியில் செயற்படும் ரிஷார்ட் பதியூதீன் போன்றவர்களை தேவையின்றி கைதுசெய்யும் பட்சத்தில், கடைசியில் பிரிவினைவாத தலைவர்களே மிஞ்சுவார்கள் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button