யாழ் பல்கலை முள்ளிவாய்க்கால் தூபி விடுதலை புலிகளின் தூபி அல்ல! மேஜர் கமல் குண்ரட்ன!

யாழ் பல்கலைக்கழகத்தில் மீள நிர்மாணிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்களை நினைவு கூரும் தூபியே தவிர, தமிழீழ விடுதலை புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

வடக்கிலோ அல்லது தெற்கிலோ இளைஞர்கள் மீள ஒரு கஷ்ட நிலைமையை சந்திக்கும் சூழல் உருவாகுவதற்கோ அல்லது பயங்கரவாத அமைப்புக்களை நினைவு கூரும் நினைவு தூபிகளை அமைப்பதற்கோ நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.

Exit mobile version