அறையில் பூட்டி வைத்து நடந்த பிரார்த்தனை – 10 வயது சிறுவன் பலி!

இலங்கையில் படல்கம – ஆண்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சிறுவனின் தாய், தந்தை, பாட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு கிடைத்தது. இதனை அடுத்து பொலிசாரின் சோதனையின் போது அழுகிய நிலையில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தொண்டையில் சளி அடைப்பட்டதால் அவதிப்பட்டு வந்த சிறுவனை, பெற்றோர் எவ்வித மருத்துவ சிகிச்சைக்கும் அழைத்துச் செல்லவில்லையென கூறப்படுகிறது.

அத்தோடு, சிறுவனை அறையொன்றில் வைத்து நோய் குணமாகும் வரை  பிரார்த்தனைகளை நடத்தி வந்தநிலையில் சிறுவன் உயிரிழந்ததாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து சிறுவனை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு என அவரது பெற்றோர் சமய பிரார்த்தனைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்ததாகவும் தெரியவருகிறது.

இதுதொடர்பில் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு பிரேத பரிசோதனைகளுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Exit mobile version